shadow

உங்களுக்கு பணப்பிரச்சனையா? இதோ எளிய பரிகாரங்கள்

ஏழை முதல் பணக்காரர் வரை சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று பணப்பிரச்சனை. இந்த பிரச்சனையை கடவுள் அருளினால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஆண்டாண்டு காலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பணப்பிரச்சனைகளை தீர்க்கும் ஆன்மீக வழிகள் குறித்து தற்போது பார்ப்போம்

1. ஒவ்வொரு வியாழக்கிழமை விரதமிருந்து குபேரனை வழிபட பணப்பிரச்சனை படிப்படியாக தீர்ந்து பணம் வர ஆரம்பிக்கும்.

2. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும். வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.

3. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

4. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள், குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

5. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது. பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களை மட்டும் வழிபட பணம் வரும்.

6. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு, ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது. பணம் ஓடிவிடும்.

7 பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

Leave a Reply