ஈபிஎஸ் ஆட்சி இன்னும் எத்தனை நாள்? டிடிவி தினகரன்
கடந்த 2 ஆண்டுகள் மோடி தயவில் ஆட்சியை நடத்திவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்றும், அவருடைய ஆட்சி இன்னும் ஒருசில நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று அரவக்குறிச்சியில் அம்முக வேட்பாளரை ஆதரித்து பேசிய டிடிவி தினகரன், அமமுகவும், திமுகவும் கூட்டு என பொய் பரப்புரை செய்கிறார்கள் என்றும், எங்கள் உடலில் ஓடுவது திமுக எதிர்ப்பு ரத்தம்; ஜெ. தொண்டர்கள் திமுகவுடன் சமரசம் செய்யமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
மேலும் அதிமுக ஆட்சி வரும் மே 23 வரை தான் என்றும், அதன்பின் ஜெயலலிதா விரும்பிய நல்லாட்சி மலரும் என்றும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.