இஸ்ரோவின் சந்திராயன் 2 குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை.

பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ஆற்றி வருகிறார். பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்துடன் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ‘உங்களுடையை உழைப்பால் இந்த நாட்டை பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள்’ என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சந்திரயான்-2 திட்டத்துக்காக தூக்கமின்றி பல நாட்கள் விஞ்ஞானிகள் உழைத்துள்ளதாகவும், விஞ்ஞானிகளின் தியாகத்தால் நாடு பெருமை கொள்வதாக பிரதமர் கூறினார்

விஞ்ஞானிகளின் மனநிலையை, சோகத்தை நேற்றிரவு உணர்ந்ததாகவும், கடைசி வரை போராடிய் நீங்கள் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று கூறிய பிரதமர் மோடி, இறுதி தருணத்தில் ஏற்பட்ட பின்னடைவு நிரந்தரமானது அல்ல என்றும், நிலவை தொடும் நமது முயற்சி நிச்சயமாக வெற்றி அடையும் என்றும் கூறினார்.

Leave a Reply