இலங்கை குண்டுவெடிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவங்களும், அதனால் ஏற்பட்ட உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவெறி – இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply