இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு: முக்கிய ஆலோசனை நடந்ததாக தகவல்
நேபாளத்தில் நடைபெற்று வரும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற சென்ற பாரத பிரதமர் மோடி, அங்கு இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இருநாட்டு உறவுகளின் மேம்பாடு, கலாச்சாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேபாளம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு நேபாள அரசு முறைப்படி சிறப்பான வரவேற்பு மற்றும் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.