இறந்த மகனுக்காக 63 நாட்கள் தாய்ப்பாலை சேமித்த தாய்: 63 வது நாள் என்ன செய்தார் தெரியுமா?
குறைப்பிரசவத்தில் பிறந்த மகனுக்காக தனது மார்பில் இருந்து சுரந்த பாலை 63 நாட்கள் சேகரித்த அமெரிக்க பெண் ஒருவர், 63வது நாளில் செய்த செயல் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது
அமெரிக்காவை சேர்ந்த சாரா என்ற பெண்ணுக்கு சமீபத்தில் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை ஒன்று பிறந்து சில மணி நேரத்தில் இறந்தது. இதனை அடுத்து அவருடைய மார்பில் சுரந்த பாலை அவர் பாட்டிலில் சேகரித்து 63 நாட்கள் பதப்படுத்தி வைத்து இருந்தார்
63வது நாளில் அந்த பால் அனைத்தையும் அவர், குடிக்க பால் இல்லாத குழந்தைகளுக்கு தானமாக வழங்கினார்
குறைப்பிரசவத்தில் தனது மகன் பிறக்காமல் இருந்திருந்தால் அன்று தான் அவன் பிறந்திருப்பான் என்றும் இதன் நினைவாக தான் சேகரித்த பாலை தானமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் செய்த பதிவுக்கு லைக்ஸ்கள் கமெண்ட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.