shadow

இறந்த குழந்தையை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்த பெரு பெண்

பெரு நாட்டைச் சேர்ந்த மோனிகா பலோமினா என்ற பெண்ணுக்கு கடந்த சனிக்கிழமை குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறக்கும்போதே சரியான வளர்ச்சியடையாததால் எதிர்பாராத விதமாக இறந்து விட்டது. இந்த நிலையில் குழந்தையின் இறப்பு சான்றிதழ் கிடைத்த பிறகே குழந்தைக்கு இறுதி சடங்குகள் செய்ய முடியும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் குழந்தைக்கு இறப்பு சான்றிதழை கொடுக்க மருத்துவமனை தாமதம் செய்தது. மேலும் மருத்துவமனை பாதுகாவலர் கொடுத்த தொந்தரவு காரணமாக குழந்தையின் உடலை மோனிகா தனது வீட்டிற்கு எடுத்து சென்று குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்துவிட்டார்

மறுநாள் அந்த பெண் மருத்துவமனைக்கு சென்று இது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து மருத்துவமனை இயக்குனர் ஜூலியோ சில்வா பேசுகையில், பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அவருக்கு நேர்ந்தது மிகவும் தவறாகும். காவலாளி மருத்துவமனை விதிமுறைகளை மீறியுள்ளார். உடலானது இறப்புச் சான்றிதழ் கொடுக்கும் வரை பிணவறையில் பாதுகாக்க பட வேண்டும். ஆனால் உடல் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் மருத்துவமனை நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது என கூறினார்

Leave a Reply