ஆச்சரிய புகைப்படங்கள்
இறந்து போன மனைவியின் நினைவாக, ‘புதுமனை புகுவிழா’வில் மனைவியை போலவே அச்சு அசலாக ஒரு மெழுகு சிலையை உருவாக்கி அருகில் உட்கார வைத்த கணவர் குறித்த ஆச்சரியமான தகவல் வெளிவந்துள்ளது
கர்நாடகாவில் தொழிலதிபர் சீனிவாச குப்தா, பிரம்மாண்டமான வீடு கட்டி கிரஹபிரவேஷம் நடத்த விரும்பினார்.
ஆனால் அவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் மனம் வருந்திய சீனிவாச குப்தா தனது மனைவியைப் போல மெழுகு சிலை ஒன்றை சோபாவில் அமர்ந்த நிலையில் செய்தார்.
அச்சு அசலாக தனது மனைவியின் முக சாயலுடன் இருந்த மெழுசிலைக்கு மனைவிக்கு பிடித்த பிங்க் நிற புடவை அணிவித்து அதனுடன் அமர்ந்து புகைப்படமெடுத்துக்கொண்டார்.
தங்களுடைய அம்மாவே நேரில் வந்து குடும்பத்துடன் புதுமனை விழாவை கொண்டாடியது போல இருந்ததாக அவருடைய 2 மகள்களும் உறவினர்களும் கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது
Leave a Reply
You must be logged in to post a comment.