இரட்டை இலை குறித்த வழக்கு: சுப்ரீம் கோர்ட் சென்ற தினகரன்
இரட்டை இலை குறித்த விவகாரம் தேர்தல் ஆணையத்தில் உள்ள நிலையில் ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் தேவை என தினகரன் தரப்பில் இருந்து அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால் கூடுதல் அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதை அடுத்து இதுகுறித்து தினகரன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும்படி அறிவுறுத்தியது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தினகரன் முறையீடு செய்துள்ளார். இரட்டை இலை குறித்த இறுதி விசாரணையை இன்று தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளதை அடுத்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.