இரட்டை இலை எங்கு உள்ளதோ அங்குதான் நான் இருப்பேன்: அதிமுக எம்.எல்.ஏ
அதிமுகவில் இருந்து நான்கு எம்பிக்கள் திமுகவுக்கு தாவவிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறது, அந்த நால்வரில் ஒருவர் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் என்று கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு எதிராக ஒருபோதும் நான் செயல்பட மாட்டேன் என்றும், இரட்டை இலை சின்னம் எங்கு உள்ளதோ அங்குதான் கடைசிவரை இருப்பேன் என்றும் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் உறுதிபட கூறியுள்ளார். இதனையடுத்து நால்வரில் ஒருவர் இவர் இல்லை என்பது உறுதியாகியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.