இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஆயுதப்பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன.
அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதி ஆயுதப்பூஜை, விஜயதசமி என்பதாலும் அதற்கு முந்தைய நாட்கள் சனி, ஞாயிறு என்பதாலும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாகும். இதனால் சொந்த ஊருக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணித்து சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க தமிழ்நாடு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக 6 ஆயிரத்து 145 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தவிர தமிழ்நாடு போக்குவரத்து கழக இணையதளத்திலும், ரெட் பஸ் மற்றும் பேடிஎம் உள்ளிட்ட செயலிகள் வழியாகவும் முன்பதிவு செய்யப்படுகிறது. பெரும்பலான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் இன்று முதல் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.