இன்று மாலை குளத்திற்குள் வைக்கப்படுகிறார் அத்திவரதர்
அத்திவரதர் வைபவம் கடந்த 48 நாட்களாக சிறப்பாக நடைபெற்றது. 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் காட்சி அளித்த அத்திவரதர் தரிசனம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனையடுத்து அத்திவரதர் வைபவம் சிறப்பாக நடக்க உதவிய காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இன்று மாலை அத்திவரதர் குளத்தில் வைக்கப்படவுள்ளார். மீண்டும் அத்திவரதர் தரிசனம் 2059ஆம் ஆண்டு தான் பக்தர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.