இன்று நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்பு?

நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த எச்.வசந்தகுமார் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வெற்றார். இதனையடுத்து அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி மரணம் அடைந்ததால் இந்த தொகுதியும் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இம்மாதம் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று நண்பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த சந்திப்பின்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Leave a Reply