சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் திடுக்கிடும் தகவல்
தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 690ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளதாகவும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 64 வயது பெண் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 50 பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 19 பேர் அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.