இன்றும் மழை பெய்யுமா? இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி என்ன ஆகும்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்று கொண்டிருந்த அரையிறுதி போட்டி மழை காரணமாக ரிசர்வ் டே எனப்படும் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் போட்டியின் முடிவு என்ன ஆகும் என்பதை பார்ப்போம்

உலகக்கோப்பை போட்டியின் விதிப்படி அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் மழை பெய்தால் ஆட்டம் நின்ற இடத்தில் இருந்து அடுத்த நாளில் தொடங்கும். அதன்படி இன்று போட்டி 46.2வது ஓவரில் இருந்து தொடங்கும். இன்றும் மழை குறுக்கிட்டால் இந்தியா லீக் போட்டிகளில் அதிக புள்ளிகள் எடுத்துள்ளதால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்படும்

Leave a Reply