இன்னொரு என்கவுண்டர் வேண்டும்: குளச்சல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு!

களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சன் என்பவரை இரண்டு பேரும் படுபயங்கரமாக சுட்டுக் கொலை செய்த சம்பவம் தமிழகத்தை அதிரச் செய்தது. இந்த நிலையில் இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

எஸ்ஐ வில்சன் கொலை செய்யப்பட்டு ஒரு சில நாட்கள் ஆன பின்னரும் இன்னும் அரசியல் தலைவர்கள் பலர் இந்த கொலை குறித்து வாய்திறக்கவில்லை என்பதும், இதுகுறித்து எந்த மீடியாவும் விவாதம் நடத்தவில்லை என்பதும், அதற்கு காரணம் என்ன என்பதும் அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் வில்சனைகொலை செய்த குற்றவாளிகளை கண்டு பிடித்தால் மட்டும் போதாது அவர்களை என்கவுண்டர் செய்து கொலை செய்ய வேண்டும் என்று குளச்சல் காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே ஹைதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவரை பலாத்காரம் செய்து கொலை செய்தவர்களை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply