shadow

இன்னும் 50 ஆண்டுகளில் என்ன நடக்கும் தெரியுமா? வைகோ அதிர்ச்சி தகவல்

என்றாவது பதவிக்கு வருவோம் என்ற நம்பிக்கையுடைய தலைவர்கள் பொறுப்பை உணர்ந்து பேசுவதும், என்றைக்குமே பதவிக்கு வரமுடியாது என்ற நிலையில் உள்ள தலைவர்கள் இஷ்டத்திற்கு பேசுவதை தமிழக அரசியலில் நாம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று மதிமுக தலைவர் வைகோ கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு தான் சொந்தம் என்று சொல்லும் காலம் இன்னும் 50 ஆண்டுகளில் வரும் என்று கூறியுள்ளார்.

வைகோவின் இந்த பேச்சு தனித்தமிழ்நாடு என்பதை மறைமுகமாக வலியுறுத்துவதை போல் உள்ளது. வைகோவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply