இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை? முதல்வருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
பேனர் விதிமீறலால் நேற்று சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியான நிலையில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என ஒரு முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு மீதான விசாரணையின்போது, ‘விதிகளை மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என முதல்வர் அறிக்கை வெளியிடலாமே? * இன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது? என பேனர் விழுந்து இளம்பெண் பலியானதை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் பேனர் விதிமீறல் விஷயத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என எந்தவித பாகுபாடும் இன்றி விதிகளை மீறி வருகின்றனர் என நீதிபதி தெரிவித்தார்.
இனிமேலாவது உடனடியாக முதலமைச்சர் பேனர் வைக்க மாட்டோம், பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்ற உறுதிமொழியை தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.