shadow

இனி வருடத்திற்கு இரண்டு நீட் தேர்வுகள்: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகள் இனிமேல் ஆண்டுக்கு இரண்டு முறை ஆன்லைன் மூலம் டத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த தேர்வுகளை புதிதாக கட்டமைக்கப்பட்ட தேசிய தேர்வு நிறுவனம் என்னும் நிறுவனம் நடத்தும் என்றும், இனிமேல் சி.பி.எஸ்.இ இந்த தேர்வுகளை நடத்தாது என்றும் அவர் கூறியுள்ளார். வருடத்துக்கு இருமுறை என அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வெவ்வேறு தேதிகளில் நடத்தப்படும் என்றும், இதனால் மாணவர்கள் பயன் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் ஜெ.இ.இ தேர்வுகளும், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நீட் தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இந்த இரண்டு தேர்வுகள் மட்டுமின்றி, யு.ஜி.சி நெட் மற்றும் சி.எம்.ஏ.டி ஆகிய தேர்வுகளும் இனிவரும் ஆண்டுகளில் தேசிய தேர்வு நிறுவனத்தால் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply