இந்த உலகம் மனிதநேயத்தை என்றோ இழந்து விட்டதா? அதிர்ச்சி வீடியோ

இந்த உலகம் மனித நேயத்தையே இழந்துவிட்டதோ என்று அதிர்ச்சி அடையும் வகையில் தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது

இந்த வீடியோவில் ஒரு குப்பைத்தொட்டியில் இருந்து ஒரு குழந்தையின் சத்தம் கேட்கின்றது. அதனையடுத்து அந்த குப்பைத்தொட்டியில் முடிச்சுபோட்ட ஒரு பிளாஸ்டிக் பையினை ஒருவர் திறந்து பார்த்தபோது பிறந்து ஒருசில மணி நேரமே ஆன ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது

உடனடியாக அந்த குழந்தைக்கு முதலுதவி செய்யப்பட்டு தற்போது குழந்தைகள் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பெற்ற குழந்தையை பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பைத்தொட்டியில் போட்ட அந்த ஈவு இரக்கமற்றவர் யார்? என்பதே தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது

//twitter.com/commonmantalks/status/1214905931382702081

Leave a Reply