shadow

இந்தூரிலும் இந்தியாவுக்கு வெற்றி: தொடரையும் வென்றது.

ஏற்கனவேஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று இந்தூரில் 3வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம்  இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றதோடு, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடமும் பெற்றுள்ளது.

இந்தூரில் நடந்த இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரெலிய அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 293 ரன்கள் அடித்தது.  வார்னர் 42 ரன்களும், பின்ச் 124 ரன்களும் ஸ்மித் 63 ரன்களும் எடுத்தனர். 

எனவே 294 என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் ரஹானே ஆகியோர்களின் நல்ல தொடக்கத்தால் வெற்றியை நெருங்கியது. ரோஹித் சர்மா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் கேப்டன் விராத் கோஹ்லி 28 ரன்களிலும் அவுட் ஆனாலும் பாண்டியா மற்றும் மணிஷ் பாண்டேவின் பொருப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. பாண்டியா 72 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 47.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 294 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான 4வது ஒருநாள் போட்டி வரும் 28ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவுள்ளது.

Leave a Reply