shadow

இந்திய சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்துவர்களின் பங்கு இல்லை: பாஜக எம்பி

இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமே பங்கு பெற்றிருந்தனர் என்றும், கிறிஸ்துவர்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் பா.ஜ.க. எம்.பி. ஒருவர் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக பிரமுகர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் நிலையில் மும்பை வடக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி என்பவர் சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அந்நியர்களான அவர்களுக்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறு பங்கு கூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.பி.யின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத்தொடந்து, அவரது பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply