shadow

இந்திய எல்லையில் குவிக்கப்படும் சீன ராணுவம்

இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே அவ்வப்போது கருத்து மோதல் வந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக அருணாச்சல பிரதேச பகுதியை சீனா ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் ஒருசில நடவடிக்கை எடுப்பதும், அதற்கு இந்தியா பதிலடி கொடுப்பதும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வுகளாக உள்ளது.

இந்த நிலையில் திடீரென இந்திய எல்லைப் பகுதியில் ஆயுதங்களுடன் ராணுவ வீரர்களை சீனா குவித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்திய-திபெத் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ராணுவ வீரர்களை சீன ராணுவம் குவித்துள்ளதாகவும், அவர்களிடம் மொபைல் பீரங்கி டேங்குகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு நாட்டு எல்லையில் பதட்டம் நீடிப்பதாக கூறப்படுகிறது

 

Leave a Reply