இந்தியாவுக்கு 244 ரன்கள் இலக்கு: தொடரை வெல்லுமா இந்தியா?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்க் இடையே நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 244 ரன்கள் இலக்காக நியூசிலாந்து அணி கொடுத்துள்ளது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 243 ரன்கள் எடுத்துள்ளது. டெய்லர் 93 ரன்களும், லாதம் 51 ரன்களும் குவித்தனர்.
இந்திய தரப்பில் ஷமி 3 விக்கெட்டுக்களையும், பாண்ட்யா, சாஹல், மற்றும் புவனேஷ்குமார் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். ஒரு விக்கெட் ரன் அவுட் முறையில் வீழ்ந்தது
Leave a Reply
You must be logged in to post a comment.