இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை: தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?
இந்தியா முழுவதும் வறுமை, கடன் தொல்லை உள்பட பல்வேறு காரணங்களால் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த அறிக்கை ஒன்றை அரசு வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலின்படி விவசாயிகள் தற்கொலையில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது. இம்மாநிலத்தில் மட்டும் மேற்கண்ட மூன்று ஆண்டுகளில் 11,441 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கர்நாடகாவும், மத்திய பிரதேசம் 3-வது இடத்திலும் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் தமிழகம் 8-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 1,606 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த பட்டியல் 2013 ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை மட்டுமே குறிப்பிடுகிறது. 2015-ம் ஆண்டுக்கு பின்னர் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை அரசு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.