இந்தியாவில் இருந்து தப்பிச்சென்ற நிரவ் மோடி லண்டனில் கைது

பஞ்சாப் நேசனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி கடன் பெற்றுவிட்டு திடீரென இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனுக்கு தப்பி சென்ற வைரவியாபாரி நிரவ் மோடி லண்டனில் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இருக்கும் இடம் கடந்த வாரம் ஒரு பத்திரிகை நிருபரால் வெளியானது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள நிரவ் மோடி லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்

மேலும் நீரவ் மோடி கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர தீவிர முயற்சிகள் செய்யபடும் என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply