shadow

இந்தியாவின் கல்வி நிறுவனங்களை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர்கள்!

இந்தியாவின் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் பாகிஸ்தான் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளன.

ஐஐடி டெல்லி, அலிகர் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி புவனேஷ்வர் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களில் இணைய தளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஹேக் செய்த பாகிஸ்தான் ஹேக்கர்கள் தங்களின் ஆதரவு கருத்துக்களையும் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர். “பாகிஸ்தான் ஹக்ஸ்சர்ஸ் க்ரூ” என்ற பெயரில் பாகிஸ்தான் ஹேக்கர்கள் இந்த வேலையை செய்துள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற வாசகம் அனைத்து தளங்களிலும் பதிவேற்றப்பட்டன. உங்கள் ராணுவ வீரர்கள் காஷ்மீர் அப்பாவி மக்களை கொன்று குவிக்கின்றனர். உங்களுக்கு அப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்ற ரீதியில் பதிவிடப்பட்டு இருந்தது. நேற்று இரவு 9 மணிக்கு கல்வி நிறுவனங்களின் இணைய தளங்கள் மீட்கப்பட்டன.

Leave a Reply