shadow

இது என்ன கல்யாண வீடா? வைகோவை கலாய்த்த துரைமுருகன்

நேற்று கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வைகோவை பார்க்க வந்த துரைமுருகன் அவரை கலாய்த்த சம்பவம் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

நக்கீரன் கோபால் நேற்று கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பின்னர் திடீரென சிந்தாதரிப்பேட்டை காவல்நிலையம் முன் தர்ணா போராட்டம் நடத்தினார்.

இதனால் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக வைகோவை கைது செய்த போலீசார், பின்னர் அவரை திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் திருமண மண்டபத்தில் வைகோவை பார்க்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வந்திருந்தார். அவருடன் துரைமுருகனும் வந்த நிலையில் எல்லோரையும் வைகோ எழுந்து நின்று வரவேற்றார். அப்போது துரைமுருகன், ‘சும்மா உக்காருய்யா, இது என்ன கல்யாண வீடா? எல்லோரையும் எழுந்து நின்று வரவேற்க’ என்று கலாய்க்க, அந்த இடமே சிரிப்பலைகளால் நிறைந்தது

Leave a Reply