இதற்கு கெஞ்சியவர் அதற்கு ஏன் கெஞ்சவில்லை: ஸ்டாலினை கலாய்க்கும் நெட்டிசன்கள்
திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் அடக்கம் செய்ய இடம் வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையை பிடித்து கெஞ்சியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் நடந்த திமுக செயற்குழுவில் கண்ணீர் மல்க பேசினார்.
தனது தந்தைக்காக கெஞ்சிய மு.க.ஸ்டாலின் என்றைக்காவது மக்கள் பிரச்சனைக்காக முதல்வரை பார்த்து கெஞ்சியதுண்டா? என நெட்டிசன்கள் டுவிட்டர், ஃபேஸ்புக்கில் கேள்வி கேட்டு வருகின்றனர்.
குறிப்பாக 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை, அணுவுலை, மீத்தேன், நியூட்ரினோ, கெய்ல் போன்ற அழிவுத்திட்டங்கள் வேண்டாமென்றோ, விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீடு, அரசு ஊழியர்களுக்கு ஊதியவுயர்வு வேண்டுமென்றோ இப்படி கையைப்பிடித்து ஸ்டாலின் ஒருநாளாவது கெஞ்சியதுண்டா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.