ஆஸ்திரேலியா: 100 கிமீ வேகத்தில் சென்ற ரயிலில் வெளியே பயணம் செய்த இளைஞர்
ஆஸ்திரேலியா நாட்டின் முக்கிய நகரான பெர்த் நகரில் இருந்து கடந்த சனிக்கிழமை இளைஞர் ஒருவர் வேகமாக செல்லும் ரெயிலின் பின்புறத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியில் ஓட்டிக் கொண்டு பயணம் செய்துள்ளார். 110 கி.மீ. வேகத்தில் சென்ற ரெயிலின் வெளியே, வைபரை பிடித்தபடி நின்றுகொண்டு பயணம் செய்தும் அந்த இளைஞருக்கு எந்தவித ஆபத்தும் நேராதது அதிசயமாக இருப்பதாக கூறப்படுகிறது..
அந்த மர்ம நபர் அவ்வாறு பயணம் செய்வதை பார்த்த தொழிலாளர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து அடுத்த ரெயில் நிலையத்தில் அவரை போலீசார் அவரை பிடித்தனர்.
இதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர் மனநலம் சரியில்லாதவர் என்பது தெரிய வந்தது. அவரை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ரெயிலின் வெளியே பயணம் செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது
//www.youtube.com/watch?v=YcNrGq6cDUw
Leave a Reply
You must be logged in to post a comment.