ஆஸ்திரேலியா அருகில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?
ஆஸ்திரேலியா அருகில் உள்ள பப்புவா நியூகினியா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பப்புவா நியூகினியா மற்றும் சாலமன் தீவுகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோகோபோ என்ற தீவின் அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 7 ஆக பதிவானது.
இந்த பயங்கரமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மேற்கண்ட தீவுகளில் சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.