ஆற்றங்கரையோரம் அனாதையாக கிடந்த 3000 ஆதார் அட்டைகள்: அதிர்ச்சி தகவல்

ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் இன்றியமையாத ஒன்று என்ற நிலையில் திருத்துறைப்பூண்டி முள்ளியாற்றின் கரையோரம் 3000க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் அனாதையாக கிடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்த முதல்கட்ட விசாரணையில் இந்த் ஆதார் அட்டைகள் கட்டிமேடு, ஆதிரங்கம், வடபாதி கிராமத்தினரின் ஆதார் அட்டைகள் என தெரிய வந்துள்ளது. ஆதார் அட்டைகளை மூட்டையில் கட்டி கரையோரம் வீசிச் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply