shadow

ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு மேலும் 4 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரிக்கும் விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த ஆணையம் 3 மாதத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆணையத்திற்கு ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply