ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: தொழுகையில் ஈடுபட்டிருந்த 62 பேர் பலி!


ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் வெடித்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு காரணமாக அந்த மசூதியில் தொழுகை செய்து கொண்டிருந்த குழந்தைகள் உள்பட 62 பேர் பலியாகினர். இதனால் நாடு முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த வெடிகுண்டு சம்பவத்தில் இன்னும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது

இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும், ஆனால் இந்த பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் தலிபான்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும் என்றும் ஆப்கன் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

Leave a Reply