shadow

ஆந்திர காவல் நிலையத்தில் தமிழக வாலிபர் திடீர் மரணம்: போலீஸ் கொடுமையா?

ஆந்திர மாநிலத்தில் உள்ள தென்னேரி என்ற பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்களிடம் சத்தியவேடு காவல் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் கடுமையாக அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதில், ராஜா என்ற 24 வயது தமிழக வாலிபர் மரணம் அடைந்துவிட்டார்

உயிரிழந்த ராஜா, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திர காவல் நிலையத்தில் தமிழக வாலிபர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply