shadow

ஆண்டுக்கு ஒரே படம்: விஜய்யின் அதிரடி முடிவு ஏன் தெரியுமா?

இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய்யின் சர்கார் படம் வெளியான நிலையில் சர்கார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன்னுடைய அடுத்தப்படத்தை விஜய் முடிவு செய்துவிட்டார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் அட்லீ இயக்கும் படம் தான் அது.

இப்போது சர்கார் படத்தை முடித்த சில வாரங்களில் தனது அடுத்த பட வேலைகளை துவங்கி விட்டார் விஜய். தெறி, மெர்சல் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் இந்த படம் விஜய்யின் 63-ஆவது படம்.

இன்னும் பெயரிடப்படாததினால் தளபதி – 63 என குறிப்பிடப்படும் இந்த படத்தின் பூஜை, சென்னை மையிலாப்பூரிலுள்ள கோயிலில் எளிமையாக நடைபெற்றது. இந்த படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த தீபாவளிக்கு சர்கார் படத்தை கொடுத்த விஜய் தனது அடுத்தப்படத்தை அடுத்த வருட தீபாவளிக்குத்தான் கொடுக்கிறார். இதன் மூலம் இனிமேல் ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக தெரிகிறது.

படத்தில் நடித்த நேரம் போக எஞ்சிய நேரங்களில் தன்னுடைய அரசியல் பிரவேசத்துக்கான பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளாராம். கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்கும் திட்டமும் வைத்துள்ளார் என விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply