ஆசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழிப்போம்: இம்ரான்கானுக்கு மோடி வேண்டுகோள்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ள மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனக்கு வாழ்த்து தெரிவித்த இம்ரான்கானுக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி, ‘ஆசிய பிராந்தியத்தில் தீவிரவாதத்தை ஒழித்து அமைதியையும், முன்னேற்றத்தையும் உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு, மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply