பரபரப்பு தகவல்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ச்சியாக ஆறு கட்ட ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது
இதில் தற்போது ஆறாம் கட்ட ஊரடங்கு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைவதை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து மருத்துவ குழு உறுப்பினர்களிடம் முதலமைச்சர் ஆலோசனை செய்ய உள்ளார்
இந்த ஆலோசனையின் போது தமிழகத்தில் பஸ் போக்குவரத்து தொடங்குவது குறித்தும் அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இது குறித்து முக்கிய அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
தமிழகத்தில் ஒரு சில நிபந்தனைகளுடன் பேருந்து போக்குவரத்து ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர்
Leave a Reply
You must be logged in to post a comment.