shadow

அழகிரி பேரணியில் குவிந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள்: திமுக அதிர்ச்சி

இன்று மு.க.அழகிரி சென்னையில் நடத்தும் அமைதிப்பேரணியில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்துள்ளதால் திமுக தலைமை அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இன்று திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் இந்த பேரணியில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து மட்டும் சுமார் 15 ஆயிரம் வந்துள்ளனர்/ அதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் தொண்டர்கள் வந்துள்ளதால் அழகிரி கூறியதை போல் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்றே தெரிகிறது.

இந்த பேரணியில் கலந்து கொள்ள ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் கருப்பு வண்ண ஆடைகளுடன் குவிந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதற்காக மெரினாவில் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Leave a Reply