அழகிரிக்கு ஆதரவு இருக்கின்றதா? அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் திமுகவுக்கு சிம்ம்சொப்பனமாக அழகிரியின் அமைதிப்பேரணி இருக்கும் என்று கருதப்படுகிறது.
மேலும் திமுகவை பிடிக்காத கட்சிகள் அழகிரிக்கு ஆதரவாக பேசி வருவதாகவும் கூறபடுகிறது. இந்த நிலையில் அழகிரியை வைத்து திமுகவை உடைக்கும் எண்ணம் அதிமுக உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘திமுகவை உடைக்கும் எண்ணம் அதிமுகவுக்கு கிடையாது என்றும் தமிழகம் முழுவதும் அழகிரிக்கு ஆதரவு எவ்வாறு உள்ளது என்பது செப்டம்பர் 5ம் தேதிக்கு பின்னர் தெரியும் என்றும் கூறினார்.
பாஜக, அதிமுக உள்ளிட்ட ஒருசில கட்சிகள் அழகிரிக்கு மறைமுக ஆதரவு கொடுத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.