‘அறம்’ வெற்றியை தொடர்ந்து ‘அறம் 2’: படக்குழுவினர் திட்டம்
லேடி சூப்பர் ஸ்டார் நடித்த ‘அறம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி மூன்றே நாட்களில் சென்னையில் மட்டும் ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதேபோல் அனைத்து நகரங்களிலும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக உள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் கோபிநயினார் மீண்டும் நயன்தாரா நடிப்பில் ‘அறம் 2’ படத்தை இயக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை ‘அறம்’ படத்தயாரிப்பு நிறுவனத்துடன் இணணந்து நயன்தாரா தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘அறம் 2’ படத்திலும் முதல் பாகம் போலவே ஒரு சமூக பிரச்சனை அழுத்தமாக பதிவு செய்யப்படும் என்று இயக்குனர் வட்டாரங்கள் கூறுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.