அருள், வருமானம், டிஆர்பிஐ கொடுத்த அத்திவரதர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 48 நாட்களாக பக்தர்களுக்கு காட்சி அளித்த அத்திவரதர் ஒரு ஆன்மீக நிகழ்வாக மட்டும் இல்லாமல் ஒரு வியாபார நிகழ்வாகவும் இருந்தார்.

அத்திவரதரால் காஞ்சிபுரத்தில் வியாபாரம் கொடிகட்டி பறந்தது. ஊடகங்கள் அங்கேயே தங்கியிருந்தன. செய்தியாளர்கள் விடிய விடிய அத்திவரதர் செய்தியை தந்தனர். கடைசி நாளில் ஒருசில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்தன.

மொத்தத்தில் அருள் வேண்டுவோருக்கு அருளையும் , வருமானம் வேண்டியவர்களுக்கு வருமானத்தையும் , டிஆர்பி வேண்டியவர்களுக்கு டிஆர்பி யையும் அத்திவரதர் அளித்துள்ளார் என்பதே உண்மை

Leave a Reply