அருண்விஜய்யின் ‘பாக்சர்’ படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை
‘என்னை அறிந்தால்’ படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து அதனை தக்க வைத்து கொண்டிருக்கும் நடிகர் அருண்விஜய் நடித்த ‘தடம்’ திரைப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளதாக நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை அறிமுக இயக்குனர் விவேக் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு ‘பாக்சர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தில் அருண்விஜய் பாக்சராக நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளார். இவர் நிஜ வாழ்விலும் பாக்சர் என்பதால் இந்த படத்தின் நாயகிக்கு பொருத்தமாக இருப்பர் என்பதும் ஏற்கனவே வெளியான பாக்சர் படமான ‘இறுதிச்சுற்று’ படத்தில் இவர் நடித்து தேசிய விருதை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
லியோன் இசையில் மார்க்கஸ் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் பாலசந்தர் கலை இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் முதல் தொடங்கவுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.