shadow

அருண்ஜெட்லி-விஜய் மல்லையா சந்திப்பு குறித்து விசாரணை: மோடிக்கு ராகுல்காந்தி வேண்டுகோள்

இந்திய வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் கடன் பெற்றுவிட்டு அந்த கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றுவிட்ட தொழிலதிபர் விஜய் மல்லையா நேற்று லண்டனில் பேட்டி அளித்தபோது, ‘தான் நாட்டை விட்டு வெளியே வந்தபோது நிதியமைச்சர் அருண்ஜெட்லியை சந்தித்து கடனை திருப்பி கொடுப்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறினார்.

ஆனால் இதனை அமைச்சர் அருண்ஜெட்லி மறுத்தார். கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பின்னர் விஜய் மல்லையாவை தான் சந்திக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு விஜய் மல்லையா அருண் ஜெட்லியை சந்தித்ததாக வெளியான செய்தி தொடர்பாக பிரதமர் மோடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply