shadow

அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்களின் தற்கொலை அதிகரிப்பது ஏன்?

அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அதில் அதிகமானோர் தெங்கானாவை சேந்தவர்களாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிசாபாத் பகுதியை சேர்ந்தகணேஷ் என்ற விவசாயின் மரணம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியில் கொண்டு வந்துள்ளது. 24 வயதான கணேஷ் பதாவத் என்பவர் தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். அவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் அவர் 4 முறை போர் போட்டும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ரூ 3 லட்சம் வரை கடன் வாங்கியதை திரும்பி செலுத்தவும், குடும்பத்தை காப்பற்றவும் பஹரைன் நாட்டுக்கு ரூ.18,000 ஊதியத்திற்கு கிளினராக வேலைக்கு சென்றார் கணேஷ் பதாவத் .

அங்கே அவருக்கு நடைபெற்ற கொடுமைகளாலும், தொடர் வேலையாலும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவரது மரணம் பல திடுக்கிடும் தகவல்களை வெளியில் கொண்டு வந்துள்ளது.கடந்த 2014 முதல் 2018 வரை அரபு நாடுகளுக்கு சென்று மரணமடைந்த இந்தியர்கள் எண்ணிக்கை 28,523. இதில் அதிகமனோர் தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தவர்கள் .

2018ல் ஐக்கிய அரேபிய நாடுகளில் 1,614இந்தியர்கள் மரணமடைந்துள்ளனர். பஹரைனில் 200 பேரும், குவைத்தில் 595 பேரும், ஓமனில் 483 பேரும், கதாரில் 261 பேரும், சவுதியில் மட்டும்2,227 பேரும் மரணடைந்துள்ளனர்.

அரபுநாடுகளுக்கு வேலைக்கு செல்லும்இந்தியர்களில் அதிகமானோர் தெங்கானாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்துஉத்திரபிரதேசம், பிகார், ராஜஸ்தான் , பஞ்சாப் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகமானோர் சவுதி அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.

Leave a Reply