அரசியலை விட்டு ஒதுங்க தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி சவால்
உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி மீது ஊடகம் ஒன்று ஆதாரத்துடன் ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது.
இதுகுறித்து இன்று விளக்கமளித்த அமைச்சர் வேலுமணி, ‘என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; நிரூபிக்க முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஒதுங்கவும், அரசியலில் இருந்து விலகவும் ஸ்டாலின் தயாரா? என சவால் விடுத்தார்.
மேலும் உள்ளாட்சி துறையில் ஸ்டாலின் அமைச்சராக இருந்ததை விட தான் அதிக திட்டங்கள் கொண்டு வந்துள்ளதாகவும், இந்த அரசை கலைக்கவும், கட்சியை முடக்கவும் திமுக சதி செய்வதாகவும் அமைச்சர் வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.