shadow

அமெரிக்கா போல இந்தியாவும் உள்ளே சென்று தாக்க முடியும்: அருண் ஜேட்லி

ஒசாமா பின்லேடனை அமெரிக்கா பாகிஸ்தான் நாட்டிற்குள் சென்று கொன்றது போல இந்தியாவும் செயல்பட முடியும் என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, ‘அமெரிக்கா போலவே இந்தியாவும் பாகிஸ்தான் உள்ளே சென்று தாக்க முடியும் என்றும், பின்லேடனை அமெரிக்கா கொன்றது போல் தீவிரவாதிகளை பாகிஸ்தான் உள்ளே சென்று இந்தியாவால் தாக்க முடியும் என்றும் கூறினார்.

மேலும் இந்தியாவால் இனியும் பொறுத்திருக்க முடியாது என்றும் அடுத்த சில நாட்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும், எல்லையில் கடுமையான பதற்றம் நீடித்து வருவதாகவும் அருண் ஜேட்லி கூறினார்

 

Leave a Reply