shadow

அமெரிக்காவில் இந்து கோவிலை அடித்து நொறுக்கியது யார்? பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலம், லூயிஸ்வில்லே நகரில் புகழ்பெற்ற சுவாமி நாராயணன் கோவிலில். கடந்த இரு நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் நுழைந்து, கோவிலின் சிலைகள் மற்றும் கலைநயம் வாய்ந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி அந்த மர்ம நபர்கள் கோவிலின் உட்புற சிலைகள் மற்றும் சுவர்களின் மீது கருப்பு நிற சாயம் அடித்திருந்ததாகவும், அதில் சில சர்ச்சைக்குரிய வாசகங்களும் எழுதப்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவ்நதுள்ளது. .

மர்ம மனிதர்களின் இந்த செயல் அமெரிக்காவில் வாழும் இந்து மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது மத வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக இருந்ததாக பலரும் குற்றம்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply