shadow

அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலைதான்: ஜெயலலிதா குறித்த திடுக் தகவல் கூறிய பிரதாப் ரெட்டி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டபோது வெறும் காயச்சல் என்று தான் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கை வெளிவந்தது. அதன் பின்னர் ஜெயலலிதா இட்லி சாப்பிடுகிறார், இடியாப்பம் சாப்பிடுகிறார், டிஸ்சார்ஜ் என்று என்பதை அவரே முடிவு செய்வார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென டிசம்பர் 4ஆம் தேதி சீரியஸ், டிசம்பர் 5ஆம் தேதி மரணம் என்ற அறிக்கைகள் வெளிவந்தன

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பல்லோ பிரதாப்ரெட்டி, ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டபோதே ஆபத்தான நிலையில்தான் இருந்ததாகவும், அவர் சாதாரண நிலையில் இருப்பதாக கூறியதற்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடாமல் இருக்கவே காரணம் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து நீதிபதியின் தலைமையில் விசாரணை நடந்து கொண்டிருப்பதால் இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றும் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்

பிரதாப் ரெட்டியின் இந்த திடீர் பல்டி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த திடீர் பல்டியால் அப்பல்லோவின் மற்ற அறிக்கையின் உண்மைத்தன்மையிலும் சந்தேகம் எழுவதாக சமுக வலைத்தள பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply