shadow

அபிநந்தனை விடுவிக்க இம்ரான்கான் ஒப்புதல்: போர்ப்பதட்டம் தணிந்தது

இந்திய விமானப்படையின் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளதால் இரு நாடுகள் இடையேயான போர்ப்பதட்டம் தணிந்துள்ளது. மேலும் இரு நாடுகளும் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவே விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய பிரதமர் இம்ரான்கான், ‘நல்லெண்ண அடிப்படையிலும், அமைதி நடவடிக்கையாகவும் இந்திய விமானி அபிநந்தனை விடுதலை செய்வதாகவும், இந்திய விமானியை விடுவிப்பதன் மூலம் பயந்து விட்டோம் என்று எண்ணி விடக் கூடாது என்றும் இம்ரான்கான் குறிப்பிட்டார்.

மேலும் பாகிஸ்தானுக்கு போர் முக்கியமல்ல என்றும், அமைதி தான் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். வாகா எல்லையில் இந்திய விமானி அபிநந்தன் நாளை ஒப்படைப்படுவார் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply